Wednesday 4 August 2010

கனவே.....

கனவே ....
படைப்பாளிக்கு நீ
பாலுட்டும் தாய்
உழைப்பாளிக்கு நீ
வாலாட்டும் நாய்
ஏழைக்கு நீ
நிரந்தர நண்பன்
கோழைக்கு நீ
நித்திரையில் நண்பன்
இளமைக்கு நீ காட்டாறு
முதுமைக்கு நீ தெளிந்த நீரோடை
இப்படி எல்லோர் வாழ்விலும்
ஏதோ ஒரு பரிமாணமாய் கலந்த நீ !
எனக்கு மட்டும் ........
என் வாழ்வையே உனதாக்கி விட்டாயே !!
வெறும் கனவாக்கி விட்டாயே ...

1 comment: