Friday 24 September 2010

இறைவன்

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் !!!
இறைவன் இன்று வரை இந்த உலகில் இல்லை
என்பதற்கு இதுவல்லவா சாட்சி !!!

Thursday 23 September 2010

வறுமை

இல்லாததா வறுமை
இல்லை இல்லை
நிறைய இருப்பதுதான் வறுமை
வயிறு நிறைய பசி
உடல் நிறைய சோர்வு
உள்ளம் நிறைய கலக்கம்
விழி நிறைய உறக்கம்
உறக்கம் நிறைய கனவு
கனவு நிறைய ஏக்கம்
வீடு நிறைய வெறுமை
வெறுமை நிறைந்த வாழ்க்கை
இல்லாததா வறுமை
இல்லை இல்லை ..
நிறைய இருப்பதுதான் வறுமை !!!




திறந்த வெளியில்
பரந்த வானமே போர்வையாக
குளிர்ந்த காற்று தாலாட்ட
நிலவின் மங்கிய ஒளியில்
இயற்கையின் மடியில்
நிறைந்த மனதோடு
உழைத்து களைத்த உடலோடு
அயரும் விழிகள்
எந்த கோடீஸ்வரனுக்கு
சொந்தம் ?


வறுமையை ஒழிப்போம் !
உரக்க கத்திக்கொண்டு ஓர் ஊர்வலம்
அரசியல்வாதியின் தலைமையில் !
வீதியோர வாசிகளை விரட்டியடித்தது போலீஸ்
ஊர்வலத்தை பாதுகாக்க !!!