ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் !!!
இறைவன் இன்று வரை இந்த உலகில் இல்லை
என்பதற்கு இதுவல்லவா சாட்சி !!!
Friday, 24 September 2010
Thursday, 23 September 2010
வறுமை
இல்லாததா வறுமை
இல்லை இல்லை
நிறைய இருப்பதுதான் வறுமை
வயிறு நிறைய பசி
உடல் நிறைய சோர்வு
உள்ளம் நிறைய கலக்கம்
விழி நிறைய உறக்கம்
உறக்கம் நிறைய கனவு
கனவு நிறைய ஏக்கம்
வீடு நிறைய வெறுமை
வெறுமை நிறைந்த வாழ்க்கை
இல்லாததா வறுமை
இல்லை இல்லை ..
நிறைய இருப்பதுதான் வறுமை !!!
திறந்த வெளியில்
பரந்த வானமே போர்வையாக
குளிர்ந்த காற்று தாலாட்ட
நிலவின் மங்கிய ஒளியில்
இயற்கையின் மடியில்
நிறைந்த மனதோடு
உழைத்து களைத்த உடலோடு
அயரும் விழிகள்
எந்த கோடீஸ்வரனுக்கு
சொந்தம் ?
வறுமையை ஒழிப்போம் !
உரக்க கத்திக்கொண்டு ஓர் ஊர்வலம்
அரசியல்வாதியின் தலைமையில் !
வீதியோர வாசிகளை விரட்டியடித்தது போலீஸ்
ஊர்வலத்தை பாதுகாக்க !!!
இல்லை இல்லை
நிறைய இருப்பதுதான் வறுமை
வயிறு நிறைய பசி
உடல் நிறைய சோர்வு
உள்ளம் நிறைய கலக்கம்
விழி நிறைய உறக்கம்
உறக்கம் நிறைய கனவு
கனவு நிறைய ஏக்கம்
வீடு நிறைய வெறுமை
வெறுமை நிறைந்த வாழ்க்கை
இல்லாததா வறுமை
இல்லை இல்லை ..
நிறைய இருப்பதுதான் வறுமை !!!
திறந்த வெளியில்
பரந்த வானமே போர்வையாக
குளிர்ந்த காற்று தாலாட்ட
நிலவின் மங்கிய ஒளியில்
இயற்கையின் மடியில்
நிறைந்த மனதோடு
உழைத்து களைத்த உடலோடு
அயரும் விழிகள்
எந்த கோடீஸ்வரனுக்கு
சொந்தம் ?
வறுமையை ஒழிப்போம் !
உரக்க கத்திக்கொண்டு ஓர் ஊர்வலம்
அரசியல்வாதியின் தலைமையில் !
வீதியோர வாசிகளை விரட்டியடித்தது போலீஸ்
ஊர்வலத்தை பாதுகாக்க !!!
Wednesday, 4 August 2010
கனவே.....
கனவே ....
படைப்பாளிக்கு நீ
பாலுட்டும் தாய்
உழைப்பாளிக்கு நீ
வாலாட்டும் நாய்
ஏழைக்கு நீ
நிரந்தர நண்பன்
கோழைக்கு நீ
நித்திரையில் நண்பன்
இளமைக்கு நீ காட்டாறு
முதுமைக்கு நீ தெளிந்த நீரோடை
இப்படி எல்லோர் வாழ்விலும்
ஏதோ ஒரு பரிமாணமாய் கலந்த நீ !
எனக்கு மட்டும் ........
என் வாழ்வையே உனதாக்கி விட்டாயே !!
வெறும் கனவாக்கி விட்டாயே ...
படைப்பாளிக்கு நீ
பாலுட்டும் தாய்
உழைப்பாளிக்கு நீ
வாலாட்டும் நாய்
ஏழைக்கு நீ
நிரந்தர நண்பன்
கோழைக்கு நீ
நித்திரையில் நண்பன்
இளமைக்கு நீ காட்டாறு
முதுமைக்கு நீ தெளிந்த நீரோடை
இப்படி எல்லோர் வாழ்விலும்
ஏதோ ஒரு பரிமாணமாய் கலந்த நீ !
எனக்கு மட்டும் ........
என் வாழ்வையே உனதாக்கி விட்டாயே !!
வெறும் கனவாக்கி விட்டாயே ...
Sunday, 25 July 2010
தேடல்
சின்னஞ் சிறு அறை
சுற்றிலும் இருட்டு
சுவாசிக்க வழியில்லை
சுவாசிக்கவும் தோன்ற வில்லை
எங்கும் நிசப்தம்
தனிமையைத் தவிர
வேறு துணை இல்லை
ஆனாலும் பயமேதும் அறிய வில்லை
உண்ணவழியில்லை
ஆனால் பசி அறியவில்லை
உறங்க வசதியில்லை
ஆனாலும் உறக்கத்தை தவிர
வேறு சிந்தையில்லை
உடுத்த உடையில்லை
அது பற்றி கவலையில்லை
இந்த நிலை என்று மாறும்
என்ற ஏக்கம் என்றும் இல்லை
அழுதோ சிரித்தோ பழகவில்லை
அதையும் தாண்டி ஒரு மோனநிலை !
சட்டென்று ஒரு கணத்தில்
விழியை ஒளியும்
செவியை ஒலியும்
நாசியை சுவாசமும் தீண்ட ...
அழுது கொண்டே விழுகிறேன்
வாழ்க்கை பள்ளத்தில் ..
விழுந்து கொண்டே தேடுகிறேன் ....
எங்கே அந்த சின்னஞ் சிறு அறை ??!!...
என் தாயின் கருவறை !
சுற்றிலும் இருட்டு
சுவாசிக்க வழியில்லை
சுவாசிக்கவும் தோன்ற வில்லை
எங்கும் நிசப்தம்
தனிமையைத் தவிர
வேறு துணை இல்லை
ஆனாலும் பயமேதும் அறிய வில்லை
உண்ணவழியில்லை
ஆனால் பசி அறியவில்லை
உறங்க வசதியில்லை
ஆனாலும் உறக்கத்தை தவிர
வேறு சிந்தையில்லை
உடுத்த உடையில்லை
அது பற்றி கவலையில்லை
இந்த நிலை என்று மாறும்
என்ற ஏக்கம் என்றும் இல்லை
அழுதோ சிரித்தோ பழகவில்லை
அதையும் தாண்டி ஒரு மோனநிலை !
சட்டென்று ஒரு கணத்தில்
விழியை ஒளியும்
செவியை ஒலியும்
நாசியை சுவாசமும் தீண்ட ...
அழுது கொண்டே விழுகிறேன்
வாழ்க்கை பள்ளத்தில் ..
விழுந்து கொண்டே தேடுகிறேன் ....
எங்கே அந்த சின்னஞ் சிறு அறை ??!!...
என் தாயின் கருவறை !
Thursday, 10 June 2010
Tuesday, 8 June 2010
Subscribe to:
Posts (Atom)